Wednesday, April 10, 2013

வெயில்

வாட்டி வதைத்திடும் வெயில்
வனாந்திரமான தெருக்கள்
ஆட்டம் போட்ட காலங்கள்
அத்தனையும் இன்று கனவுதான்.

ஊட்டி குளிராய் குளிரூட்டி
உறங்கி எழுந்து வெளிவந்தால்
மாற்றம் உடலில் மறுநொடி
மக்கள் அடைந்திடுவார் அவதி

காலத்துக் கேற்ற பருவநிலை
காய்ந்து குளிர்ந்த உடலன்று
ஆளுக்கேற்ற வசதியில்
தோலுக்கில்லை தாங்கும் சக்தி

இயற்கையோடு இயைந்த வாழ்வில்
இல்லை இந்த தொல்லையே
செயற்கை செய்த வசதியினால்
செல்லறித்த உடலமைப்பு ஆனதே

                                                                                                                     


ஆடும் வெயிலை அள்ளிப் பருகி
ஆயிரம் கனவுகள் அதனோடு பகிர்ந்து
வீடும் மறந்து விளையாடிய காலம்
வெயில் தோழமை விரும்பிய நேரம்

எல்லாம் இப்போது நிழலாகி
எளிமை உடலுக்கு பகையாகி
குல்லா குடை குளிரூட்டி
இல்லாமல் இல்லை ஆனதே


3 comments:

ஜெயசரஸ்வதி.தி said...

வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ..!!!

///சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக விடுதலைக்கான கவிதைக் களம்///
அருமை ...!!!

தொடர வாழ்த்துக்கள் ...!!!

ஜெயசரஸ்வதி.தி said...

வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ..!!!

///சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக விடுதலைக்கான கவிதைக் களம்///
அருமை ...!!!

தொடர வாழ்த்துக்கள் ...!!!

பரிதியன்பன் said...

மிக்க நன்றி .உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும்