Tuesday, August 27, 2013

தபோல்கர்

புனே நகரத்து மேம்பாலத்தில்
புல்லர்களை விரட்ட சிந்தித்து
நடைப் பயிற்சி செய்தபோது

மூட நம்பிக்கை இருளை
ஓட விரட்ட வந்த பகலவன்
சுட்டு வீழ்த்தப் பட்டான்

மருத்துவம் பயின்றாலும்
சமூகத்தை அறிவியல்  மனப்பான்மையோடு
வளர்ப்பதில் அரும்பாடுப் பட்டவர்

இந்துத்துவ வெறியர்கள் இரத்தவெறியோடு
எழுந்த காலத்தில் எதிர்ப் பிரச்சாரம் செய்து
எழுந்தது நிர்மூலன் சமிதி

பாமர மக்கள் ,படித்தவர்களையும்
சடங்கு ,பில்லி சூனிய இருளில்
சிக்க வைத்துக் கொழுத்த
போலிச் சாமியார்களின்
முகத்திரையைக் கிழித்தார்

அறிவாசான் அம்பேத்கர் மண்ணில்
அய்யா பெரியாரின் கொள்ளைகளை
பரப்புரை செய்தார் தபோல்கர்

மந்திரமென்ற பெயரில் தந்திரமாய்
மக்களை ஏமாற்றிய மந்திரவாதிகளை
மக்கள் மன்றத்தில் அம்பலப் படுத்தினார்

மகாத்மா பூலேவின் பேருழைப்பின் பூமியில்
சாமியார்களின் மோசடிகளை
சந்தி சிரிக்க வைத்தார்

காணிக்கை என்ற பெயரில்
காசை கரியாக்கும் கண்மூடிப் பழக்கத்தை
வேரறுக்கப் பாடுபட்டார்

அருந்தும் குடிநீர் ஆண்டவன் கரைசலால்
நஞ்சாகிப் போவதை
நடக்காமல் தடுத்தார்

கட்டப் பஞ்சாயத்து கௌரவக்கொலைகள்
திட்டமிட்டுப் போராடி
தீவிரமாய் எதிர்த்தார்

போதை அடிமைகளை
'பரிவர்த்தன்' மூலம்
போராடி மீட்டெடுத்தார்

காந்தியைக் கொன்றவர்கள்
கருத்துவாதம் செய்யாமல்
ஏந்தலைக் கொன்றுவிட்டார்

சூரியனை இருளால்
சுட்டுவிட முடியுமா?

மாரியினை எவனால்
மடக்கிவிட முடியும்?

ஆழியலை எவரால்
அடக்கிவிட முடியும்?


அறிஞர் தபோல்கரின்
அயராத உழைப்பிற்கு -மராட்டிய
அரசின்று,மூடநம்பிக்கை
பரப்புவோர்க்கு எதிராய் சட்டமியற்றி
அஞ்சலி செலுத்தியுள்ளது

அறிஞர் வழியில்
அடிப்படை வாதிகளுக்கு எதிராய்
அணிதிரள்வோம்

பகுத்தறிவுக் கொள்கை
திசையெட்டும் சேர்ப்போம்
பாமரமக்களை மீட்டெடுப்போம்

நரேந்திர தபோல்கருக்கு
நம்மின் வீரவணக்கம்






2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-